ஸ்ருதி மாதா! ஹிந்துஸ்தானி சங்கீதத்தில் அரங்கேற்றம் பண்ணனும்னா ,மொதல்ல சுருதி சுத்தம் என்கின்ற பாஸ்போர்ட் வேண்டும். Pitch Perfection should be 100% in that system of music. வளரும் கலைஞர்கள் கூட அவ்வளவு அழகாக ஸ்ருதி சுத்தத்துடன் பாடுகிறார்கள். கர்நாடக சங்கீதத்தில் ஸ்ருதி முன்ன பின்ன இருந்தாலும் கச்சேரி நடக்கும். கைதட்டலும் விழும்.இன்று இருக்கும் மிக மிக பிரபலமான பாடகர்களும் கூட ஸ்ருதி சுத்தத்தில் ,அவ்வளவு அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.கோட்டை விடுகிறார்கள்! இந்த நிலை எப்பொழுதுதான் மாறும் என்ற கேள்வி ,பல வருஷங்களாக என் மனதில் ஒடிக் கொண்டிருக்கிறது. கான கலாதர் ஸ்ரீ மதுரை மணி ஐயர் ஸ்ருதி சுத்தத்துக்கு பெயர் போனவர்.மேற்கே சூரியன் உதித்தாலும் உதிக்கலாம்.மணி ஐயர் சுருதி விலகாது! அவருடைய பாட்டைக் கேட்டப் பிறகு, இரண்டு மூன்று நாளைக்கு வேற எந்த பாடகர் பாட்டையும் கேட்க பிடிப்பதில்லை. அப்பேர்பட்ட மிக உயர்ந்த சங்கீதம் அவருடையது. வடக்கே ஒரு பர்வீன் சுல்தானா! ஹை பிட்ச்சில் அவர் பாடும் பொழுது மனித குரலா அல்லது வாத்யத்தில் இருந்து வரும் சங்கீதமா என்று வியக்கத் தோன்றும். ஸங்கீதத்திலும் கிரிக்கட்ட...
Popular posts from this blog
#TyagaBrahmopanishad 205.முகாரி ராகம் 22 வது மேளகர்த்தா கரஹரப்ரியாவின் ஜன்யம் ஸரஸீருஹாநந ராம ஸமயமு ப்ரோவ சித் க ந பரபா மல நர்ச்சிஞ்சி யந்நமிடி பக லு ரேயி ஸரஸமாடு வாரி நொல்ல ப் ராஹ்மணீகமு பா ய நீசுல ப் ரதுகாய நதி கா கயீ கலிலோ ப் ரஹ்மமைந மாடல நேர்ச்சுகொநி ப ரகே ரய்ய த்யாக ராஜநுத பங்கய வதனனே!இராம ! சைதன்ய ரூபத்தால் சிறந்தவனே! என்னைக் காக்க இதுவே தருணம்.பிறர் பெண்டிரைப் போற்றி அன்னமளித்து அவர்களுடன் இரவு பகலாக சரசம் புரிபவர்களுடன் நான் உறவாடமாட்டேன். பிராமணியம் மறைந்து போக நீசர்களின் பிழைப்பை மேற்கொண்டனர்.மேலும் இக்கலியில் மாந்தர் போலி வேதாந்தம் பேசக் கற்று வாழ்க்கை நடத்துகின்றனர். Reproduced from the book 'ஸ்ரீ தியாகராஜ கீர்த்தணைகள்' written by Sangeetha Kala Acharya Sri T S Parthasarathy published in 1967. ------------------------------------------------------------------- Oh Rama! This is just the time for your grace. I cannot countenance those who day in day out ,indulge in coveting other's women, feeding them and sporting with them. In the present Kali age, ideal Brahman...
கச்சேரி அமைத்துக் கொள்வதெல்லாம்!!
கச்சேரி அமைத்துக் கொள்வதெல்லாம்!! ஒரு மாமாங்கம் முன்னால் நடந்த கச்சேரி இது. திரை விலகியது! விதூஷி பஞ்சு மிட்டா கலர் புடவை, மயில் கழுத்துக்கலர் ரவிக்கை. சுமார் 2 லகரத்துக்கு ஆபாரணங்கள் ஜொலித்தது. பிடில் வித்வான் வெங்காயகலரில் ஜிப்பா. மிருதங்கம் மஞ்சா கலரில் ஜிப்பா. கடம் ஆண் மயில் கழுத்துக்கலரில் (ஒடி வந்து அடிக்கற blue color) ஜிப்பா. தம்பூரா மாமியும் நீலக்கலர் புடவை. கரகாட்ட கோஷ்டியைப்பார்த்த மாதிரி இருந்தது. பாடகி 'ஜில் ஜில்' ரமாமணியை நிணைவுப்படுத்தினார். கடம் வித்வான் ஏன் இரண்டு பாணை வைச்சிருந்தார் என்ற கதைக்கு அப்புறம் வரேன். பாடகியின் கணீர்ர்ர் குரல் ஆரம்பம். ஹார்லிக்ஸ்+பூஷ்ட்+காம்ப்ளான் காக்டையில் சாப்பிடறாரா? கிரக ராசி பலன் சரியா அமையல்லனா அன்னிக்கி ,சாரீரம் திடீர்னு பல்லவன் பேருந்து மாதிரி மக்கர் பண்ணிடும். சாரீரம் அம்பேல். சரீரத்திலியும் ரோகம். ராகம் எடுபடல. ஆரம்பித்திலேயே Nose Clearing activity ஆரம்பிச்சாச்சு. ஒரு டப்பா tissue paper காலி. சிந்தி சிந்தி paper ய சந்து வழியா கடம் வித்வான் பக்கம் பாடகி supply செய்த வண்ணம் இருந்தார். இரண்டாவது பாணை அதை போடுவதற்குதான் போலு...
Comments
Post a Comment