ஸங்கீதகிறுக்கல்ஸ்-6 th பாகம்


 

ஸங்கீதகிறுக்கல்ஸ்-6 th பாகம்

$ டாலர் தேசத்து வசீகரா! தம்புரா ரீங்காரம் மட்டுமே வந்துக் கொண்டிருந்தது. ஒரு big எதிர்பார்ப்புடன் ரசிகர்கள். வித்வான் தாடியை செல்லமாக நீவிக் கொண்டு ,பிடில் வித்வானிடம் கண் ணாலேயே consent வாங்கி கொண்டு, Coorg ல் ஆரம்பித்து, சிறு சிறு சலசலப்புடன் சிற்றோடையாய் விழும் காவேரியின் நீர்விழுச்சி போல், சிம்மேந்திரமத்திமம்(57) ராக ஆலாபணையை ஆரம்பித்தார். ராக லக்ஷணத்தை சட்டென்று காமிப்பதில் சமர்த்தர். நதிக்கரையில் சில்லென்ற நீரில் கால் நணைக்கிற உணர்வு. பூவொன்று புயலானது போல், திடீரென்று சீறிப் பாயும் காளைப் போன்ற சங்கதி. உடனே குழந்தையை கொஞ்சும் வாத்ஸல்யம் போன்ற பிடி. குத்து விளக்கு ஆடாமல் இருக்கும் போது வருகின்ற ஒளி போல் அமைதியான சங்கதி ஒருபுறம். மின்னலென வெட்டும் பிருகாக்கள். சிம்ஹம் மாதிரி ஒரு கர்ஜணையான குரலுடன் ஒரு long கார்வை.உடனே நுரையுடன் வந்து காலைத் தொட்டு முத்தமிட்டு tata சொல்லி ஒடிப்போகும் அலை போல் ஒருrendition. bare minimum repetitive சங்கதிகள். அசை போடும் பசு போல் நிறுத்தி நிதானமான சங்கதி. அசைவுகள், நகாசு லேலைகள் , அவுட்வாண சங்கதிகளலால் அலங்கரிக்கப்பட்ட நவரச ஆலாபணை. இந்த பாட்டிற்கு கூடவே நாட்டியாலாபணை யும் செய்யலாம்.அவ்வளவு ரசம். இவர் வசீகரமான சாரீரமும் ,சரீரமும் அமையப் பெற்றவர். ஸ்ரீசூர்ணம், கடுக்கன் சகிதம், கம்பீரமாக மேடையில் ஆர்ப்பாட்டமில்லாமல் அமருகிறார். இவருக்கு புராண படத்தில் மஹாவிஷ்ணு வேடம் பொருந்தும்.Powerful காந்தக் கண்கள். தாடி இல்லாமல் இருக்கின்ற பழைய புகைப்படத்தில் கூடுதல் வசீகரம் இருக்கீ. நிற்க. ஆலாபணை முடிந்தவுடன் கைதட்டல் விண்ணை பிளந்தது. மைலாப்பூர் ரசிகர்களிடமிருந்து அவ்ளவ் ஈஸியாலாம் அப்லாஸ் வாங்க முடியாது. இவர் வாங்கினார். பக்கத்தில் அமர்ந்திருந்த வித்வானுடைய தகப்பனார் son deep n meditative சங்கீதம் வழங்கியதை மகிழ்ச்சியுடனும் மற்றும் நெகிழ்ச்சியுடனும் கண்டு களித்துக் கொண்டிருந்தார். என்ன தவம் செய்தனை நீர்! 'நின்னே நம்மிதி நய்யா' மைசூர் வாஸுதேவாச்சார்யாவின் கீர்த்தணைக்கு பாடிய கல்பணாஸ்வர ப்ரவாகம்,மத்தாப்பு சிதறல்கள் ரகம். மஹாமேதை தஞ்சாவூர் கல்யாணராமணை(musician's musician,but unsung hero) ஏனோ நிணைவுப் படுத்தினார். big சபாஷ்! முன்னதாக இவர் பாடிய சரஸாங்கியின் பாஸந்திtaste உள்நாக்கில் ஒட்டிக் கொண்டிருந்ததை, அசை போடுவதற்குள், இந்த பாதம் அல்வா போன்ற சிம்மேந்திரமத்தியமம் treat ஐயும் குடுத்து விட்டார். கோபால கோகுல வல்லபி ராக துக்கடா. கடோசியில் நேயர் விருப்பமாக அடியேன் கேட்டபடி, நிரோஷ்டா ராக தில்லாணாவை(TNS இயற்றியது) ஜம்மென்று பாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். கச்சேரி முடிந்தவுடன் நண்பரிடம் கூறினேன். 'அடுத்த கச்சேரியிலேர்ந்து இவருக்கு நான் கட் அவுட் -டிஜிட்டல் பேனர் வைக்கப் போறேன்னு.' அதற்கு அவர் நீர் வைச்சாலும் வைப்பீர்.ஆச்சர்யப் படமாட்டேன்! பக்ஷே, அதெல்லாம்தான் இப்போ சர்க்கார் ban பண்ணிட்டாளே. அதெல்லாம் சரி ஓய். யார் அந்த வஸீகர வித்வான்னு நீங்க கேட்பேள்ன்னு தெரியும். அவர்தான் நம்ம SandeepNarayan

*****

Jus Felt So! அன்னமாச்சார்யா கிருதிLinux மாதிரி ஒருOS..Open Source. ஸத்குரு தியாகராஜஸ்வாமி கிருதி MS OS மாதிரி.

*****

Who moved my RTP? yesteryears RTP used to be sung for 45 minutes(minimum) during season concerts.Now it is sung only for 15 minutes...for name sake only! sad situation.Its a chance for artists to showcase their vidwath more clearly in RTP. Wish this trend changes.Senior vidwans /gurus should set an example. Before RTP becomes RIP.

*****

கர்சீப் அல்லது பையை ஸீட்ல வச்சிட்டு,கொஞ்சம் பார்த்துக்கோங்கோ, இதோ மடங்கி வந்துடறேன் னு சொல்லிட்டு ஜனங்கள்,middle of the kutcheri ல எழுந்து போய்ட்டு,திரும்பி வரச்சேseat safe ஆ இருந்தா,,அன்றைய கச்சேரி ஒஹா ன்னு அர்த்தம் பன்னிக்கலாம். மேலே கூறியபடி நடக்கலனா, அன்னிக்கி அந்த பாடகருக்கு கச்சேரி எடுபடல, ஊத்திக்கிச்சின்னு அர்த்தம். wandering rasigas!

*****

more number of people, நோண்டிfying mobile phone means ,கச்சேரி சுமார் அல்லது படு சுமார் ரகம்தான்!

*****

அந்த பாடகர் மேல் பஞ்சமம்,உச்சத்தை தொட முதலில் நிமிர்ந்து உட்கார்ந்தார். அடுத்து ஒரு கையை மேலே தூக்கல். அடுத்தது ரண்டு கையையும் மேலே தூக்கியாச்சு. உச்சத்தை தொட முயன்றார்.வர்ல நேக்கு பயமா போச்சு. அபஸ்வரம் வந்துடுமோன்னு. நகத்தை கடிக்ஸ் மொமண்ட் ஆடியன்ஸ்க்கு. ஆடி போய்ட்டார்கள் ரஸிகாஸ். ஒருstage ல மைக்கை தூக்கி, நின்னுன்டு try பன்னுவாரோன்னு. பாடகருக்கும் பயம் வந்துடுத்து. தொபகடீர்னு, பவ்யமா கீழே இறங்கி வந்து,எங்க வவுத்தில பாலை வார்த்தார் ஸ்ஸ்ஸ்..அப்பாடா. KVN கிட்ட கத்துகனும். பலம் பலவீனம் அறிந்து பாடுவதற்கு.

*****

My fav-நாகப்பட்டிண ராஜனைப் பத்தி முத்துஸ்வாமி தீக்ஷிதரின்legendary kriti 'Soundara Raajam Ashraye Gaja Brindaavana Saaranga Varada' பிருந்தாவனசாரங்காவின் செளந்தர்யத்தை மிக அழகாக வெளிச்சம் போட்டுக் காட்டினார். கொள்ளை அழகு! எழுந்து நின்னு,once more கேட்க தோனித்து! இவருடைய பாடாந்தரம் அப்படி பட்டது. Congratulations for the awesome rendition of this great work by MSD. Big Sabash! Sumitravasudev.

*****

அவன்:ஏண்டா,அந்த வித்வான் பாட்டு எப்படி? இவன்:அவரா? அவர்ர் வந்து.. அவன்:மென்னு முழுங்காத ,சும்மா சொல்லுடா. இவன்: "அந்த வித்வான், அபூர்வ ராகத்தை ஸர்வ சாதாரணமாக நன்றாகவும் , சாதாரன ராகத்தை அபூர்வமா நன்னாவும் பாடுவார்.

******

நடையை மாத்துங்கோ! இனிமே எடுத்தவுடனே தனி ஆவர்த்தனம்தான்னு bill pass பன்னுங்கோ😁Fire emergency மாதிரி இனி ஓடமாட்டா! (நான் நடையை கட்டி,இப்பிடிக்கா போறேன்.)

*****

now trending... குனிந்த தலை நிமிராமல் கச்சேரியை கேட்பதுதான். பிஜிwith ஜெல் phone!

*****

நாதஸ்வரம்னா TNR ,Karukurichi தான். அவா மாதிரி வாசிக்க முடியாது. வாஸ்தவம்.ஒப்புத்துக்றேன். அவாள்ளாம்great தான். அன்னிக்கும், என்னிக்கும்,எப்பவும். சந்திர+ஸுர்யா இருக்கறவைக்கும் அந்த உன்னதமான கலைஞர்கள் புகழ் நிலைத்து நிற்கும்.

ஆனா இங்க ஒரு TNR ,Karukuruchi உருவாகிக் கொண்டிருக்கிறாரே.. வந்து கேக்க மாட்டீகளா?????

ஊர்மிகாவில் நம்மை ஊக்குவிக்கறாரே! பைரவி வர்ணத்தை ஸ்வர்ணமா ஜ்வொலிக்க வைக்கிறராரே! செளராஷ்டிரத்தில் ஒரு செளஜன்யத்தையும் ஜனரஞ்சகத்தையும் வழங்குகிறாரே.

இதோ இப்ப இவர் வாசித்துக் கொண்டிருக்கிற தோடி ,கோடி பெறும். Hats off to Shri Mylai Karthikeyan. #மயிலைதந்தகுயில்

என்னுடன் இப்போ,இந்த உன்னதமான இசையை ,கானாம்ருதத்தை பருகி கொண்டிருக்கும் அந்த25 சக ரசிகர்களுக்கு நன்றி! Now playing 2 raga RTP Khambhoji & Sumanesaranjani. What a combo!

*****

Renganatha Sharma at Arkay Convention Center (ACC).

Just Felt So! புள்ளிக் கோலம் போடுவதை வியப்புடன் பார்ப்பேன்.நேக்கு ரெம்ப இஷ்டம்ஸ். முதலில் சிறு புள்ளிகளைwith geometric precision வைப்பார்கள்.then connecting the dots. அப்றம்தான் இருக்கு கச்சேரி. காம்பஸ் இல்லாமல் லகுவாக,மட மடவென்று வித விதமான இலக்கணத்துக்குட்பட்டdesign கள், மனோதர்மத்தில் மிக அழகாகunfold ஆகும்.வித விதமான கலர்பொடியுடன் பிரம்மாண்டமாகrangoli தெருவை அடைத்துக் கொண்டு பிரஸன்னமாகும் அழகே அழகு.Dr Renganatha Sharma தனக்கே உரித்தான மோஹன புன்னகையுடன் ஆரம்பித்து மோஹன ஆலாபணையைrangoli touch உடன் முடித்தபோது கரகோஷம் அரங்கத்தை நிரப்பியதை சொல்லவா வேண்டும்!Wow!மடை திறந்த வெள்ளமாக கல்பணா ஸ்வரம்s .ஒவ்வொன்றும்belgium cutting diamonds.அடேங்கப்பா!again Wow!

*****

மழை பெய்து முடித்தவுடன் கிராமப்புற தவளைகள் ஒவ்வொன்றாக,மோர்சிங் மாதிரி கச்சேரியை ஆரம்பிக்கும்.அதே மாதிரி இங்கும் அங்குமாக செல்போன் அலறியது ஆலாபணை நடுவில். பக்கத்தில் இருந்த மாமா அவாளை முறைத்துப் பார்த்தார். சங்கீதம் கேட்க வரவாளுக்கு இங்கிதம் தெரியமாட்டேங்கற்து. உள்ளே நுழயச்சேவே silent mode ல போட்டுட்டு வரவேண்டாமான்னு அங்கலாய்த்து, என்ன நாஞ்சொல்றதுன்னு? என்னிய பார்த்துக் கேட்டார். ஞான் மய்யமா ஒரு சிறு புன்னகையோடு நிறுத்திக் கொண்டு, மேற்படி கரகரப்பிரியா நிரவலில் கவனம் செலத்தினேன்.சித்த நாழிக்கப்றம் அந்த மாமாவோட கைபேசியே full volume ல அலறியது.!

*****

அந்த வித்வான் வளரும் இளம் கலைஞர். ஒருconfusious. பந்துவராளி மாதிரி ஆரம்பித்து, ஒரு சரக் யு டர்னில்,பூர்விகல்யாணிக்கு தாவினார் ஆலாபணையில். பிடில் வித்வான் mind voice டெல்லிங்கு: படா பேஜார்ba இவர் டீலிங்கு. மஹா ரோதணையாக்கீது ba. இதுக்கு கரீக்டான எக்ஜாம்பிள் எதுன்னா, நம்பிள்கீ மின்னாடி போர ப்ளஷர்(car), left indicator போட்டுட்டு, அசால்ட்டாright ல திரும்பற மொமண்டு.

*****

J A Jayanth and NC Bharadwaj at TAG Centre.

இன்ப தேன் வந்து பாயுது காதினிலே!When North & South meets,,there is bound to be a blissful music. The word Jugalbandi means entwined twins. Flute Giant & Pt.Ronu Majumdar gave an outstanding concert for Viswa Kala Sangama yesterday.They were supported by top class percussion vidwans NC Bharadwaj & Shri V Narhari. The hall was jam packed with connoisseurs of music,galaxy of artists and elite rasigas. Kalaimamani Pt.Janardan Mitta welcomed the gatherings. Lighting of Kuthuvilakku by Padma Bhushan Sangeetha Kalanidi Sudha Ragunathan. Chief Guest was His Highness,The Prince of Arcot Nawab Mohammed Abdul Ali. He gave a very very impressive speech with humour & humility.Hats off Sir. Guest of Honour Ms Lakshmi Menon CEO Indian Express Group & Ms Chinmayi Sripada ,Playback Singer. Conferment of Award Viswa Kala Puraskar to Pt.Ronu Majumdar and Shri Neyveli Santhanahopalan . Very loud applause for the prayer song by Shreya Ramnath.What a sweet voice with so much bhavam.இது வேறlevel talent. After abhogi & kapinarayani when Pandit announced the main raga for the evening is Maduvanti & Dharmavathi ,loud cheers from audience.Next 45 minutes the sangeetham that flowed from the two flutes were out of the world. The gamakams,brikas,effortless sangatis in 3 octaves by the maestros were melliflous.great sync between the two flautists and great team work. It was indeed a memorable musical evening. Sabash!

*****

ஸ்ருதி சேரா கர்நாடக இசை மஹா ஹிம்ஸை! Uttered by Poojyasri Narayana Vedanthananda

*****

Grand Vocal Concert by the youth icon #SandeepNarayanL Ramakrishnan V Balaji Chandrasekara Sharma at Sastry HallCoorg ல் ஆரம்பிக்கிற காவேரி மாதிரி சிறு சிறு சலசலப்புடன் சிற்றோடையாய் சிம்மேந்திரமத்திமம்(57) ராக ஆலாபணை.நதிக்கரையில் சில்லென்ற நீரில் கால் நணைக்கிற உணர்வு.திடீரென்று சீறிப் பாயும் காளைப் போன்ற சங்கதி.சரேல்னு குழந்தையை கொஞ்சும் வாத்ஸல்யம் போன்ற பிடி..குத்து விளக்கு ஆடாமல் இருக்கும் போது வருகின்ற ஒளி போல் அமைதியான சங்கதி ஒருபுறம்.சிம்ஹம் மாதிரி ஒரு கர்ஜணையான குரலுடன் ஒரு long கார்வை..உடனே நுரையுடன் வந்து காலைத் தொட்டு முத்தமிட்டு tata சொல்லி ஒடிப்போகும் அலை போல் ஒருrendition..அசை போடும் பசு போல் நிருத்தி நிதானமான சங்கதி..மொத்தத்தில் நவரச ராக ஆலாபண.blessed

******

All City Sabhas are equal.Level playing field created by Madras Mosquitos. Go with agmark வேப்ப எண்ணை for peaceful listening!

*****

கொன்னக்கோல் போயே போயிந்தி..மோர்சிங் No More ஆகிடும் போலிருக்கு.

*****

அந்த வித்வான் ராக ஆலாபணையை ஆரம்பித்தார். பக்கத்து ஸீட் ரஸிகர் புருவத்தை உயர்த்தி இது இன்னா ராகம்னு கேட்டார். நான் கீரநாவளி ன்னேன். பின்னாடி இருந்த மாமிக்கு பாம்பு செவி. இல்லே.கீரவாணி தான்னு அடம்பிடித்தார். நான் மெளனம் சாதித்தேன். இப்போ கீரநாவளியின் ஸ்வருபம் இன்னும் தெளிவாக, அழகாக வெளிப்பட்டது. my mind voice :இன்னமும் சந்தேகப்படலாமோ? (கோபாலகிருஷ்ண பாரதி-கீரவாணி) பக்கத்தில் இருந்தவர் என்னை சந்தேகத்துடன் பார்த்தார்.FIR போடல. சிறு ஆலாபணையை முடித்த கையோடு, வித்வான் Eti yochanalu thyagarajaswamy கிருதியை ஆரம்பித்தார். In the kriti Eti Yochanalu Sadguru asks Lord not to slip on his word. #kiranavaliragam

*****

அந்த ரண்டு boys feed ஆ (in english- speed) தனித்தனி மோட்டர்சைக்கிள்களில்,அபாயகரமாக 'one way' ல என்னை கடந்து போனார்கள்(ofcourse without helmet). அந்த ரண்டுtraffic cops இதை ஒரு விதமான' Zen' நிலையில்,சாக்ஷி பாவத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். Margin of error & Reaction time given to me was very less. இன்றைய கிரக ராசி படிbrake சொல் பேச்சு கேட்டதோ,தப்பித்தேன்! உணர்ச்சிகள் மரத்துப் போன நிலையில் கடந்தேன். போன ஜென்மத்திலிருந்தே இதெல்லாம் பழகி விட்டது எனக்கு. இதுவும் கடந்து போகும்! ஏகப்பட்ட cctv cameras installed in the streets..with impunity traffic violations taking place! உபரிச்செய்தி: இடம்:Mount road ...thousand lights.. அந்த ஆட்டோகார் காலைத் தூக்கி நின்று ஆடிக்கொண்டிருந்தார்,ஆட்டோவை ஒட்டிக்கொண்டே.(யதுகுலக்காம்போதி...மாரிமுத்தாப்பிள்ளை க்ருதி..ஆதி தாளம்) அவரோட சகாவின் ஆட்டோself எடுக்கல.அதான் உபகாரம் பண்ணறார். வலது காலால் நண்பரோடauto வை உதைத்துக் கொண்டே பயணம். எப்பேர்ப்பட்ட உபகாரம்that too in morning peak traffic ! three much ya. all my brain cells were in super alert & in emergency mode..feed ஐ குறைத்தேன். ஸ்ரீ முஷ்ணம் ராஜா ராவின் வாசிப்பை ரசித்துக் கொண்டே! எனக்கு ரெம்ப ரெம்ப ரெம்ப பிடித்த மஹா வித்வான். awesome வாசிப்பு. உதைத்த ஆட்டோman சற்றே விலகும் பிள்ளாய் மாதிரி விலகிச் சென்றார்.அதுக்கு மேலே அவர்க்கு உதைக்க ராஸ்தாவில் இடமில்லை. உதைபட்ட சிகாமணிக்கு prime mover moved away ஆனதில் ஷாக். ஆனாலும் சமாளிச்சுfied..by சரேling, leftல ஒரம் கட்டிfied..இப்போ என் கூட தோழமையுடன் வந்துக் கொண்டிருந்த இன்னொரு கார் ஓட்டுனர் படா பேஜார் ஆகிட்டார். திட்டி fying in madras பாஷை..choicest words... தனி ஆவர்த்தணம் முடிஞ்சி மைசூர் ஸஹோதர்கள் வயலினில்,அனுபல்லவியை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்கள். மத்யமாவதி ராகம்.(janyam of karaharapriya 22nd). optimum volume ல கர்னாடக ஸங்கீதம் கேட்பதுdriving stress ஐ குறைக்கிறது நேக்கு. ஈஸ்வரோ ரக்ஷது! #chennaitrafficdiscipline

*****

பிறந்தாத்துக்கு போய் சீராடிவிட்டு வந்த மாட்டுப்பெண் போல்,புக்காத்துக்கு வந்து புதுப்பொலிவுடன் ஆரம்பித்தார் கச்சேரியை அந்த வித்வான். ஏரா நாபை தோடி ராகவர்ணம் பட்டிணம் சுப்ரமணிய்யர் இயற்றியது. செம்ம கூட்டம்.நிறைய தரை டிக்கட்ஸ். Happy to see young rasigas too. No doubt he is a crowd puller like his guru. GenNext icon. ஒரு மாதம் முன்புதான் இவர் பிறந்த நாட்டில் ஏகப்பட்ட கச்சேரியை மிகச் சிறப்பாக முடித்து விட்டு வந்தார். பல வருடங்களுக்கு முன்பு இவர் கச்சேரியைக் கேட்டேன். 'அவர்' மாதிரியேதான் பாடினார் கச்சேரி முழுவதும், முக பாவணை அங்க சேஷ்டை முதற்கொண்டு. another copycat ஆகிவிடுவாரோ என்ற நிணைப்பும் பயமும் வந்தது. (நல்ல வேளைஅப்படிலாம் நடக்கவில்லை.)


சில வருடங்களுக்கு முன் இவர் கச்சேரியை கேட்டு முடிந்தவுடன் ,'ஒரு' வார்த்தை சொல்லி விட்டு வரலாம்னு அவரை தேடினேன். Canteen ல கூட்டத்தில் முண்டியடுத்துக் கொண்டு'ஒரே' வார்த்தைதான் அவரிடம் சொன்னேன். 'குருவை மிஞ்சிட்டீங்க' அன்னிக்கு கச்சேரி படு ஜோர் என்பது உ.கு.நெ.போல புரிந்திருக்கும் உங்களுக்கு.


He is fearless,very confident to experiment on stage new things,adept in handling vivadhi /unpopular ragas, extraordinary sahitya & raga bhava,excellent laya,always smiling & appreciative of co-artists on stage,speed with melody,very good in selection of songs,brilliant kalpanaswarams etc., Opening is very important for playing chess as well as raga alapana. The way he develops a raga alapana is like seeing an expert pilot taxing the plane on the tarmac,smooth take-off from runway,steadying the plane to the comfort of the passengers,climbing smoothly to 40k ft, slow descending,and the passengers will never know he has already landed smoothly,as they would be in a trance,air lifted to a different world. தனக்கென்று ஒரு தனி bani யைestablish செய்து விட்டார்,இந்தcreative vidwan. Behind these achievements must be கடின உழைப்பு,dedication & devotion,blessings from Gurus & உம்மாச்சிand ofcourse great support from his family. And he is a role model who made it big from LA to MA.


I confess happily that I have become an addict to his top class sangeetham. Aaseervadam to him for a greater musical journey. I can see a future Sangeetha Kalanidhi in him, like his guru.


We are proud of you SandeepNarayan

*****

SKC #sweetkaramcofee விட்டு விட்டு விடாமல் மழை சூடான பில்டர் காபி காரமான மிளகு வடை ஸ்வீட்டான காபி ராகம் சபாஷ்!

*****

Old only is Gold! இந்த மாதிரி விமர்சனமும் நீங்கள் கேட்க கூடிய சந்தர்ப்பம் வரலாம் கச்சேரியின் நடுவில். அன்னிக்கி இளம் வித்வான் விஸ்தாரமா தோடி பாடி முடித்தார்.ரொம்ப ஒஸ்தியா இருந்தது. ஆடியன்ஸின் உண்மையான கைதட்டல்.. சந்தோஷப்பட்டேன். பின்னாடி இருந்த ஒரு பெரிசுக்கு வெண்கல குரல்..திருவாய் மலர்ந்தருளினார். 'இதல்லாம் என்ன தோடி..அறுவத்திரெண்டோ?மூணோ சரிய்யா க்ஞாபகம் இல்ல நேக்கு. ரஸிக ரஞ்சனி சபால. கூட்டமான கூட்டம்.அன்னிக்கி அவர் ஒரு தோடி பாடினார் பாருங்கோ! யப்பா..ரெம்ப ஒஸ்தி.மனுஷன் அசத்திட்டார்..அப்ளாஸ் அடங்கற்துக்கே சித்த நாழியாச்சு..இவர் பாடினப்பறம் பிடில் வித்வான் ஆரம்பிச்சார்.எடுபடவேயில்ல. சோகையா ஏதோ ஆடியன்ஸ கையை தட்டி வச்சா.' இன்னொரு பெரிசு. 'நன்னா சொன்னேள் போங்கோ.வாஸ்தவமான பேச்சு.இதல்லாம் என்ன பாட்டு.அந்த காலத்து பாட்டே பாட்டுதான்..சும்மாவா சொன்னா ஓல்ட் ஈஸ் கோல்ட்டுன்னு.. சரி வாங்கோ..நம்ப பிரம்ம கஷாயத்தை(cofee) சாப்ட்டு வருவோம்.'

பெரிசுகள்migrate பண்ணச்சே,அப்போ சொன்ன மாதிரி யல்லாருக்கும் சாய்ந்தாடம்மா சாய்ந்தாடுதான். Obsessive Compulsive Disorder கேள்விப்பட்டிருக்கேன். Obsessive Comparison Disorder ன்னு ஒன்னு இருக்கா? ஈஸ்வரோ ரக்ஷது! என்னோட 55 வருஷlistening experienceல இப்போ இருக்கிற ஆர்ட்டிஸ்ட்டும் ரொம்ப சிறப்பா பாடிண்டும், வாசித்துக்கொண்டும் இந்த அரியக் கலையை பாதுகாத்தும் வளர்த்துக் கொண்டும் வருகிறார்கள். Hats off to them! Gold க்கு Old or New ன்னு தரம் பிரிக்கமுடியுமா? Gold is Always Gold.

*****

SeasonofCarnaticmusicJayanthikumareshAreyouMargazhiReady

Wow! Everyday I was looking at the clock to strike 6 am..You are the first mover to utilise the full potential & reach of social media to spread our greatest treasure called Carnatic Music.Many fence sitters who are reluctant to listen to our sangeetham will now be happy to be a rasiga of this system of music.You are the messenger of music sent by Goddess Saraswathi to this world and you are doing great service to the cause of carnatic music.Short of words to thank you adequately.It is a tough task to explain the difference of 2 or 3 allied ragas in 5 minutes and you have done a marvellous job.Your analogy of quoting the kutcheri related scenarios as an introduction creates an interest to listen further for a layman.These videos will be a great source of inspiration & learning for artists & students all over the world.We are now Margazhi Ready loaded with more knowledge of ragams.Your creativity at your best in the season of carnatic music..Your 40 plus ragam presentation few years back at Krishnaganasabah (only raga alapanai) is still fresh in my memory.We are all blessed to listen to your divine music. Your sangeetham instantly transports us to a different world .That is the power & magic of your touch because String Sings.Looking forward to the concert at the iconic Sathyam Cinema & at other venues.Congratulations & Best Wishes.

*****

ரெம்ப நாளைக்கப்றம் சபாவில நண்பணை பார்த்தேன். சங்கீத ஞானம் உண்டு. பரஸ்பர குசலம் விசாரித்த பிறகு அவன்: என்ன வயஸாற்து உனக்கு இப்போ? நான்:சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ரகஸ்யமாக (வயஸ் ல்லாம் பப்ளிக்கா சொல்லப்டாது) அவனிடம் 'ரிஷபப்ரியா' ன்னு சொன்னேன் அவன்:ஙே ன்னு விழித்து விட்டு உன் வயஸூ ஏனுன்னுதான் கேட்டேன்? நான்:அதான் சொன்னேனே!ரிஷபப்ரியா ன்னு அவன்:ஷண நேரம் யோசித்து விட்டு புன் முறுவலுடன் 'நண்பேன்டா' ன்னு கைகுலுக்கினான்.😀

*****

Appeal to Artists! 59 th Melam Dharmavati janyam Vijayanagiri is such a beautiful ragam, created by Sangeethakalanidi Sri Harikesanallur Muthiah Bhagavathar. எந்த த்ரேதா யகத்தில கச்சேரியில் கேட்டதா ஞாபகம். பாராமுகம் ஏனோ? Main ராகமாவோ or Sub Main ராகமா எடுத்துண்டு விஸ்தாராமா பாடுங்கோ! RTP யா பாடினா அடியேன் ரெம்ப குஷியாடுவேன்.கானாம்ருதமா இருக்கும். இந்த ராகத்தை குதூகலமா பாடிPopularise செய்யவும் ,extinct ஆகற்துக்கு மின்னாடி! மிக்க நன்றி! ragamvijayanagiriyearning

*****

Just Felt So! சிந்துபைரவி கேட்டாலே நேக்கு மனம் ஊமையாக அழும். அது க்ஷணநேரம்தான்.. அடுத்து இந்த ராகம் நம்மை ஒருphilosophical sphere க்கு அழைத்துச் செல்லும். கண்ணை மூடிக்கொள்வது அனிச்சையாக நடக்கும்.எண்ணக் குவியல்கள் சுருங்குவதை சாக்ஷியாக பார்க்கும் தருணம். மிக மெல்ல மெல்ல வெளியுலக தொடர்பு அற்று போவது தெளிவாக உணர முடிகிறது.. அகம் கரைகிறது. மனம் குவிந்து புள்ளியாக மறைகிறது. நமக்கு மேல் ஒரு அமானுஷ்ய சக்தி இருக்கிறது என்பதற்கு பதிலாக, 'அது' வே கண் சிமிட்டி அழைக்கிறது. ஆலிங்கணம் செய்கிறது. You suddenly feel Nothing. No Thing. Nothing is Every thing and Everything is Energy. You become part of 'அது' 'அது 'என்ன ரூபமா? அரூபமா? திரை விலகி சட்டென்று மூடிக் கொள்ளும் ரஸவாதம் நடக்கும். Sindubhairavi janya ragam of 8 th Melam Hanumath Todi is such a powerful & philosophical ragam. At the end of the concert by design it is sung or played to invoke ,induce a philosophical approach ...after enjoying lot of ஜாலி,குதூகல ராகம்ஸ்.. May be to remind us all good things has to come to an end.& that end is the new beginning for some thing. #sindubhairaviragam

*****

RTPs are 3 types. micro ,mini, macro depends upon time managemet skills.

*****

What is the difference between Krithi & Keerthana? Krithi wears salwars often, while Keerthana often wears sarees.

*****

Music & Humour keeps me going in life.

*****

சாய்ஞ்சாடம்மா சாய்ஞ்சாடு! ராகத்தில் நீங்கள் லயித்திருக்கும் போது,இது நடக்க சாத்யக்கூறுகள் அதிகம். சடார் என்று சிகை அலங்காரம் செய்பவர் நம் இருக்கையை ஒரு சாய் சாய்ப்பாறே எந்த வித முன்னறிவிப்பின்றி ..அதே மாதிரி பின்row வில் ஓருத்தர் உங்களுடையPush Back Seat ஐ பற்றற்று பற்றிக் கொண்டு நகருவார்..seat பிடிப்பதற்கு மிக மிக அவசரமாக..(like fight for power in mahapolitics) தூக்கி வாரிப் போடும் உங்களுக்கு first time..அப்றம் பழகிப் போய்டும்..ஜோஸ்யர் ஜோக் மாதிரி. நீங்க நடுcenterல உக்காந்தா, மத்தளத்துக்கு ரண்டு பக்கம் இடி மாதிரி,நிறைய தாட்டி இந்த வைபவம் நடக்கும். adjust madu. AC கொஞ்சம் தூக்கலா இருந்தா அவ்ளோதான்..too much traffic கொஞ்சம் ஸ்தூல சரீர நபர் உங்கseat ஐ பற்றினால் சீட்டே பணால் தான்.குடை சாய்ஞ்சிடும்..ஜாக்ரதோ ஜாக்ரதஹ! சில பேர் உங்களை சாய்க்கற்துக்கு பதிலா,seat ஐ ஒருpush பன்னுவா..push front seat? இதுவும் done without any warning .spondilytes இருக்கறவாளுக்கு ஜாஸ்தி வலி ..இல்லாதவாளுக்கு வரும். ஜாக்ரதோ ஜாக்ரதஹா! அல்லாரும் ஒரு வழியா நம்மிள்கிrow லsettle ஆனப்றம்,ஒருத்தர்க்கு mobile ringingன்ற நிகழ்வு நடக்கும்..அந்த மாமி மஞ்சப்பையிலேர்ந்து கைபேசியை எடுக்கற்துக்குள்ள ஊரே கூடிடும்..எடுத்து..ஒ ..3 வதுrow ல இருக்கியா..இதோ வரேன்..துண்டைப் போடு..மறுபடியும் உங்களுக்கு சாய்ஞ்சாடம்மா சாய்ஞ்சாடுதான்! நான் நாளை முதலு என்னோட கார்rear view mirror ஐ கழட்டி கொண்டாந்து,இந்த மாதிரி trafficஐ கவனித்து அவாளுக்கு வழி வுடப்போறேன்! இதைtype செய்ஞ்சுண்டு இருக்கச்சேவே சடார்னு... சற்றே விலகும் பிள்ளாய்.. பின்குறிப்பு: பக்கத்தில் இருக்கும் பாட்டி நான் இதை பதிவு செய்வதை முக்காவாசி கடைக்கண்ணால் பார்த்து படித்து விட்டார்.. சின்ன வயசிலே நன்னா காப்பி அடித்திருப்பாரோ?

*****

இன்று Madhuradhwani இசை விழாவில், குன்னக்குடி பாலமுரளிகிருஷ்ணாவின் கச்சேரி ஆரம்பிக்கும் முன், ஒரு நிமிட மெளன அஞ்சலி மறைந்த இசை மேதை மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணாவிற்கு செலுத்தப்பட்டது.பாடகர் இந்த கச்சேரியை அந்த மஹாவித்வானுக்கு அர்ப்பணித்தார்.அக்கரை சுப்புலக்ஷ்மி பிடில், B சிவராமன் மிருதங்கம், ஸ்ரீ சுந்தர் குமார் கஞ்சிரா.ஸோபில்லு சப்தஸ்வர..தியாகய்யர்வாள் கீர்த்தணையுடன் கச்சேரியை துவக்கினார்..ஜகன்மோகினி ராகம்..15 வது மேளகர்த்தா மாயாமாளவகெள ராக ஜன்யம். ஆரம்பமே தூள் பறந்தது..கச்சேரி களைக்கட்டியதற்கு காரணம்his presentation of the kriti..சிட்டஸ்வரத்தை மிக அழகாக பாடினார். (இதை அமைத்த தியாகராஜஸ்வாமியின் மேதாவிலாசம் பிரமிக்கதக்கதாக உள்ளது) விரிவான, விவரமான நிரவலுக்கு பிறகு வந்த கல்பனாஸ்வரம் ஒன்னாங்கிளாஸ்..அடுத்து வந்தது தேவமனோஹரி ராகம்....தேவார்மிதமா இருந்தது. 22 வது மேளகர்த்தா ராகமான கரஹரப்பிரியா ஜன்யம்...எவரிகை அவதார..தியாகராஜ கிரிதி..இந்த அழகான ராகம சில பாடகர்களால் இன்னும் புழக்கத்தில் இருக்கு..அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் அடிக்கடி பாடுவார்.கீர்த்தணையை மிக நேர்த்தியாக பாடினார்.பாடாந்தரம் அப்படி..அவருடைய குரு பத்ம பூஷன் ஸ்ரீ பி எஸ் நாராயணஸ்வாமி கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தார்.அடுத்த ஐட்டம்தான் masterpiece..சுபபந்துவராளி ராகத்தை எடுத்தார்.. 45 வது மேளகர்த்தா..வடக்கத்திய ஸங்கீதத்தில் இதற்கு தோடி என்று பெயர்.. this raga brings out pathos...ஸங்கீதபிரேமிகள்MBK வை இழந்த துக்கத்தை பிரதிபலிக்குமாறு இருந்தது மிக நீண்ட ஆலாபணை..மிக மெதுவாக கீழ் ஸ்வரத்தில் ஸஞ்சாரம் பண்ணிlike an aeroplane taxying slowly to runway...வேகம் எடுத்து smooth take off பண்ணி stratosphere க்கே ஆடியன்ஸை அழைத்து சென்றார்..முதலில் நீண்ட கார்வையுடன் நாதஸுவரககாரா வாஸிக்கர மாதிரி ஆலாபணை..அப்புறம் GNB school type briga laden ஸங்கதிகள்..திடீர்னு புஸ்வானம் மாதிரி மேல்ஸ்தாயிக்கு போயி வர்ண ஜாலங்களை காண்பிப்பார்..உடனே fade out பண்ணி ஒரு casecading effect ஐ கொண்டுவருவார்.அந்த காலத்தில பெரிய தலைவர்கள் இறந்தால்AIR ல சுபபந்துவராளிதான் நாள் முழுக்க வாசிப்பா..ரசிகர்கள் மத்தியில் சோகம் பற்றி கொண்டது..மணம் அழுதது...MBK வை நிணைத்து.. ஒரு விதமான trance ல் இருந்தனர் அனைவரும். including accompanying artists. .ராக ஆலாபணை கீர்த்தணை நிரவல் ஸவரபிரஸ்தாரம் எல்லாம் சேர்த்து 45 நிமிஷம்.. he has covered the raga alapana comprehensively...brought out the beauty & nuances of this great raga in different dimensions. .after many years I have heard this kind of classic presentation of this raga from this young man. அக்கரை சுப்புலக்ஷ்மி எப்பவுமே அக்கறையாக , சிரத்தையாக வாசிப்பார்..இன்னிக்கி இருக்கிற பக்க வாத்ய வயலின் கலைஞர் வரிசையில் இவர்தான் முதல். பாடகர் பாடறதை அப்படியே உள்வாங்கி blotting paper மாதிரி,திருப்பி வாசிக்கற அழகே தனி..ராக ஆலாபணையிலும் சரி,ஸ்வரக்கோர்வையிலும் சரி பாடகருக்கு சமமாக வாசித்து ரசிகர்களிடமிருந்து பாராட்டைப் பெற்றார்.ஸ்ரீ சத்ய நாராயணம் உபாஸ்மஹே நித்யம் ஸத்ய ஞானானந்த மயம் ஸர்வம் விஷ்ணு மயம்...தீக்ஷ்திர் கீர்த்தணை. ஒரு பாடகரின் மேதாவிலசத்தின் அளவுகோல் அவர் நிரவலை எப்படிpresent பன்னுகிறார் என்பதையும் பொறுத்திருக்கிறது..மத்ஸிய கூர்ம வராஹ என்ற இடத்தில் நிரவல் துடங்கியது..பின்னி பெடல் எடுத்துட்டார்..he has handled this entire 45 minutes with so much passion and sung as if there is no tomorrow..amazing..out of the world.. ஸ்வரப்ரஸ்தாரம் பாடும் போது அவருடைய அழகான பாணியில் பாடி, நடுவில் maestro Tanjore Kalyanaraman style லில் பாடியது மிக அற்புதம் என்று சொன்னால் அதற்கு இரு வேறு கருத்து இருக்காது என்று நிணைக்கிறேன். பாடகருக்கு மிருதங்கமும் வாசிக்க தெரிந்ததால் கணக்கு வழக்கெல்லாம் கணகச்சிதமா இருந்தது..Sivaraman மிருதங்கம் தங்கமான வாசிப்பு..படு செளக்யமான இடைஞ்சல் இல்லாத பக்கவாத்யம். Sundarkumar கஞ்சிரா maestro Harishankar ஐ நிணைவுப்படுத்தியது.he is simply superb..both the percussionist enhanced the quality of the concert. தனிஆவர்த்தணம் ஒருfriendly செல்லமானfight.again subbulakshmi's reply in kalpanaswaram is excellent..சுபபந்துவராளி முடிந்தவுடன் அகத்துக்கு கிளம்பிடலாமுனு தோணித்து..பலாச்சுளையை தேனில் தோய்த்து புசித்த பிறகு வேற எதையும் சாப்பிட தோனாதே..அதே மாதிரி feeling.. anyway I stayed back for further சுகானுbhavam ,ரஸானுbhavam..& we got it through ஜகதோ தாரண காபி ராகம்..again janyam of Karaharpriya..புரந்தரதாஸர் கிருதி..பிதாமஹா of Carnatic Music..ராக ஆலாபணை+கீர்த்தணையிலும் சில விஷேஸ பிரயோகத்தை கையாண்டு அசத்தினார்.MS Subbulakshmi centenary யில் இந்த பாட்டை பாடியது மிகப்பொருத்தம்.அடுத்த உருப்படி MBK 's Brindavana saranga Thillana which is a beautiful popular thillana...fitting tribute to the genius who has left us y'day.Again this raga is janyam of Karaharapriya..next piece is ஸோபனே பந்துவராளி51 st Melam...also called Kamavardhini & Kasinamakriya in Dikshidar School..this kriti by Thyagarajaswami..again an excellent presentation..Finally in Sowrashtram ragam janyam of 17 th melam Suryakantham ..mangalam நீநாம ரூபமுலகு.. as per the genius Mangalampalli Balamuralikrishnagaru, carnatic music represented anything that is pleasant to ears.."Karneshu ata iti karnaha"..We listened today Carnatic Music from Kunnakudi Balamuralikrishna & co.. மங்களானி பவந்து.

*****

1.பிலிம் பார்த்து விட்டு வந்தா நண்பர்கள் கேக்கற மொத கேள்வி படம் எப்டி இருந்திச்சி? பதில்:Second Half sooper மா! இது கச்சேரிகளுக்கும் பொருந்தும்!

2.மங்களம் பாடின்டே இருக்கச்சே,நடுவில் ரசிகர்கள் எழுந்து போகற்த பார்க்கச்சே மிகவும் வருத்தப்படுகிறேன். போன வருஷம் ஒரு பிரபல பாடகர் மங்களம் பாடுவதை நிறுத்தி விட்டு,ரசிகர்களை மங்களம் முடிந்த பிறகு போங்கள் என்று விண்ணப்பித்தார்.அப்படியும் பாதிபேர் தான் செவி மடுத்தார்கள். height of disrespect!

*****

ஒரு நாள் போதுமா? ஒரு யுகமே போதாது அவருடைய சங்கீதத்துக்கு!அவர் வேற லெவலுக்கு போய்ட்டார்.Born Genius! Mangalampalli Balamuralikrishna

*****

இதுவும் ஒரு பரிச்சியமான சமாச்சாரம்தான் சபாவில்.

6.45 pm க்கு நடக்கும் நிகழ்வு இது. (Concert ஷ்டார்ட் time 6.30 pm ன்னு பேப்பர்ல போட்டிருக்கும்.வடிவேல் மாதிரி நம்பி வந்திருப்பீங்க நீங்க)

#Voteofthanksinsabhas

மேடையில் அமர்ந்திருக்கும் பிரமுகர்களுக்கு loonggg நன்றி கூறி முடி த்து, கீழே அமர்ந்திருக்கும் பிரபலங்களையும்cover செய்து விட்டு, 'I do not want to stand between you & the kutcheri' ன்னு சொன்னவுடனே நம்மிள்கி mind voice அப்பாடா !இதோ..இதோ முடிஞ்சிடப் போற்துன்னு மகிழ்ச்சியில் நீந்திக் கொண்டிருக்கும் போது,பேச்சாளர் மூக்கு கண்ணாடியை style ஆ அட்ஜேஸ்ட் செய்து,ஒரு பெரியlist ஐ பார்த்துக் கொண்டே, 'last but not the least' ன்னு ஒரு அணு குண்டை துக்கி போட்டு பேச்சை வளர்த்தி நம்மை டென்ஸன் ஆக்கம்போது 'time stands still' ன்ற நிணைப்பு வந்தால்... நீங்கள் ஒருnormal ஆசாமிதான். (இத்துடன் என் சிற்றுரையை முடிக்க ஆவலாக இருக்கேன் என்று கூறிக்கொண்டு...) பின்குறிப்பு: Artists லாம் சுருதி சேர்த்துக் கொண்டுmike adjust செஞ்சு,வாதாபி கணம் ஆரம்பிக்கறச்சே மணி7.15 pm. Undesirable Impact: தனி ஆவர்த்தணத்துக்கு emergency declare பண்ணினா மாதிரி எல்லாரும் அவா ஜோலி பார்த்துண்டு விட்டேத்தியா கிளம்பிடறா! தாளம் இல்லாமல் சங்கீதம் ஏது ன்ற இங்கிதம் தெரியல. Punctuality Punctured Moment!

*****

இன்னும் ரண்டு மாசத்துக்கு இதை நிறைய கேட்கலாம் சபாவில்!

"எனக்கு தழிழ்ல பேசி பழக்கம் இல்லே! English தான் பேசற்து வழக்கம்.. So I am switching over to english now. Pardon me!"

The balance speech in Queen's Language continues... #speechatsabhasbeforekutcheri#musicseason2019

*****

Silence in Music ஒரு கொடுப்பினைதான் ரசிகர்களுக்கும்.

*****

Just Felt So! #சங்கீதமும்ரசணையும் இதோ Season 2019 ஆரம்பிச்சாச்சு. இன்னும் ரண்டு மாசத்துக்கு சங்கீத ரசிக சிகாமணிக்கல்லாம் கொண்டாட்டம்தான்றேன். கதணகுதூகலமா அனுபவியுங்கோ. இளம் பாடகர்கள் கச்சேரிக்கும் போய் அவர்களையும் உத்ஸாகபடுத்துங்கோ. அவர்களுக்குள்ளேயும் ஒரு மாண்டலின் ஸ்ரீனிவாஸ் இருப்பார். Unlike western classical music concerts listening,where audience give claps at the end of each song or giving standing ovation at the end of concert,our rasiga's interaction in carnatic music concerts are interactive and spontaneous appreciation by way of clapping (or பலே! சபாஷ்etc) is given then and there during alapana,niraval & song rendition. But when to clap ? இந்த கைதட்டல் விஷயம்subjective தான். இருந்தாலும் சில நிகழ்வுகள் ரசிக்கும்படியாக இல்லே. Aggressive, unmusical ஆலாபணை மற்றும் நிரவல் பாடறதுக்கெல்லாம் chorus ஆmexican wave மாதிரி கைதட்டறா.. என்னத்த ஷொல்ல . மத்தவா தட்றான்னு தானும் தட்ற கோஷ்டி தான் பாதி பேர். unmelody "பிடி" க்கலாம்clap செஞ்சா quality of sangeetham at concerts improve ஆகவே ஆகாது. mediocrity யை வளர்த்து விடப்டாது. lung power காட்டனும்னுdouble extra long கார்வையை, ஒரு பிடி பிடிச்சு, வேரோட கொத்தா பிச்சி எடுக்கறாப்போல் பாடி கை தட்டலும் வாங்கிண்டு போறா! செவிக்கும் மனதுக்கும் இதமாக இருப்பதுதானே சங்கீதம். எங்கே போய்க் கொண்டிருக்கிறது ரசிகாளோட ரசணை? கவலையாக இருக்கு நேக்கு!

*****

it begins with a smile. it goes to the goosebumps. and finally tears roll out. 3 levels of good music.


*****


Humming Birds also come to Concerts! (without sruti) that கடுப்பேத்தறாங்க moment.


*****


Grand Nadaswaram a.k.a Nagaswaram kutcheri by the young icon Sri


Mylai Karthikeyan


with Madan Mohan Prasanth


என்ன ஒரு குழைவு,


குளுமை,


சுநாதம்,


அபாரமான வித்வத்!


Amazing artist.


Always willing to experient boldly.


He presented 3 rare ragams viz #Namadesi


#Sourasena#Dhamavathi beautifully.


(Feel like I am listening to the great vidwan Namagiripettai Krishnan.)


*****


#TwinBonanza


Still that awesome Nasikabhushani(70) is ringing in my ears today.


Wow!


What a concert yesterday at Bangalore by the twin brothers,young icons Heramb & Hemanth, the Flute Maestros.


Felt like listening to the greatest Flute Maestro Dr N Ramani.


Sincerely wish Madras based Sabhas take note of these extraordinary talents and host their concerts regularly..not only in Margazhi Season.


Madras rasigas too deserve to enjoy their high quality sangeetham.


#youngtalentsincarnaticmusic


*****


Music is the Secret of My Energy!


*****


ராக ஆலாபணை!


இப்ப உங்ககிட்ட,அந்த காலத்து,அகர்வால் பவன், பாதாம் அல்வா3 piece குடுக்கிறான்னு வைச்சுக்கவும்.


நீங்க அதை நெருப்புக் கோழி,மாதிரி லபக் லபக் னு விழுங்கிட்டு ,முழிச்சா நன்னாவா இருக்கும்.


அல்வாவை அனுபவித்து சிறு சிறுpiece ஆக கடித்து,மெதுவாக புசித்தால்,ருசி தெரியும்.


அதே மாதிரிதான்,ராக structure யை 3 பாகங்களாக பிரித்து, சிறு சிறு சங்கதிகளாக (like MLV) ஆரம்பித்து, வயலினிஸ்ட்டோட ஒரு Conversation வெச்சுண்டு,medium & long கார்வையாக பாடி,பிருகாக்களுடன் வழங்கி,அனுபவித்து பாடினால் மிகச் சிறப்பாக இருக்கும்.


நடுவில் என்ன கீர்த்தணம் வரப்போற்துன்னு ,தக்ளூண்டுclue காட்டினா,நேக்கு பிடிக்கும்.


குதிரை ரேஸ்ல ஒடற மாதிரி பாட ப்டாது.


எடுபடாது.


என்ன பாடினாலும்,எப்படி பாடினாலும் கைதட்டல் தட்டினா,ஸங்கீதம் வளராது.


பைரவர் ஒடலாம்.


பைரவி ஒடப்டாது.


தவழந்து,நடக்கின்ற,


நடபைரவியின் அழகே அழகு!


இந்த மாதிரி ஒரு சோதணை உங்களுக்கும் வரலாம்.(வர வேண்டாம்னு,நாரத மகரிஷியை வேண்டிக்கிறேன்)


அதாகப்பட்டது, இப்பmain artist ஸ்வாரஸ்யம் இல்லாம பாடிண்டோ,வாசிச்சுண்டோ வரான்னு வைச்சுக்கவும்.


அப்ப எண்ண பண்ணனும்னு கேட்டேள்னா, நீங்கfocus யை shift செய்யவும் on violinist.


அவா நன்னா ஸூப்பரா வாசிச்சண்டிருப்பா.இப்ப, நீங்க violinist ஐ main artist ஆ ஸ்வீகரித்து, வயலினுக்கு பக்க வாத்யம் ,பாட்டுன்ற கணக்குல,ஸங்கீதத்தை ரசிக்க ஆரம்பிக்கனும்.


அப்றம், மிருதங்க வித்வானும் கெட்டிக்காரரா இருப்பார்.


அவரும்,இவரும் கண் ஜாடையிலே ,மற்றும் நமட்டு சிரிப்போடு, KCR கூட்டணி மாதிரி, raga வை கயிட்டு விட்டுட்டு, இவா சங்கதிக்கு சங்கதி, சும்மா வூடு கட்டி விளையாடுவா.


அதை ரசித்து பாராட்டி விடை பெறவும்.


ஆத்துக்கு போய், "நீ குழாயில்" ( அதாங்க அந்த you tube) நல்ல பாட்டைக் கேட்டுண்டே,மம்மு சாப்ட்டு ,சயனிக்கவும்.


கச்சேரி சொதப்பலா இருந்தா, நேக்குbattery bank லாம் போறல.


for mobile நோண்டிfying.


Genset தான் கொண்டு வரனும் போல.


1.30 pm kutcheri க்கு,RTP யை compulsory question னா ஆக்க வேண்டாமே.


choice ல விட்டுடலாம்.


To avoid poor time management+ tension for the artist to finish in time+ dissatisfaction to rasigas.


******

நண்பர்:என்ன வயசாற்து உமக்கு?

நான்:காந்தாமணி வயசு.


வர்:வயசைதான் கேட்டேன்!

நான்: காந்தமணிதான்.61வது மேளம்.

அப்புறம் அவரை காணோம்!

*****

Vijay TV

Sangeetha Kalanidhi Maestro Sanjay Subramanian sang Samuel Vedanayagam Pillai (1826-1889) kritis..Presented a new Raga (for me) SekaraChandrika..similar to Subapanthuvarali without Panchamam..ஐயனே உன் அழகைக் காண ஆசை நான் கொண்டேனே..brought out the nuances of this raga beautifullly & கீர்த்தணையை மிக உருக்கமாக பாடினார்..முடிவாக #demonetisation# கிருதியை பாடி standing ovation ஐ பெற்றார்..

*****

Just observed!


@Numero Uno Sabha..பெரிய விதூஷி..நடுவில பாட்டை நிறுத்திட்டா.சொன்னா" மேடைல AC குளிர் ஜாஸ்தியா இருக்கு..கொஞ்சம் கொறைச்சா தேவலை".உடனேAC ஸ்ருதி 6 கட்டைலேர்ந்து 1 கட்டைக்கு இறக்கிட்டா.(இதைத் தான்யா நான்10 நாளா சபா நிர்வாகிகளிடம் கரடியா கத்திண்டு இருந்தேன்).

******

Just Felt So!


11.30 a.m & 1.30 pm.slot ல பாடறவாளாம், 4pm/7 pm slot range க்கு ரெம்ப ஒஸ்தியா பாடறா.இவாளைலாம் சீக்ரம் சாயங்கால கச்சேரிக்கு Promote பன்னா நன்னா இருக்கும்..டிக்கட்sale வழியா வருமானமும் வரும்..சில கார்த்தால கச்சேரிக்கு ground & first floor house full..ஆனா சில சாயங்கால கச்சேரியில் very thin audience..for certain senior artists.கழட்டி விடற்து உத்தமம்.


****


Just Felt So!

@MA..சுகானுபாவத்திற்கு ராமகிருஷ்ணமூர்த்தி..Period.

*****

மொதல் போனி,விரிபோனி பைரவி


கடோசில விரிவான பைரவி!

*****

Ayyo! மீண்டும் மீண்டும் மீண்டும் தோடி! மிடிலடா சாமி!

*****

விதூஷிகள் அபங்கை (abhang)அருமையாகபாடிக் கொண்டிருந்த தருணத்தில், அபங்குக்கு, பங்கம் விளைவிக்கறார் போல்,முன் row ,பின் row விலும் என்row விலும் ஒரு கோஷ்டி சேர்ந்திசை! ஸ்ருதி பிரக்ஞை இல்லாமலேயே!


அட போட மாதவா!


...


...


கேசவா! நந்த கோபாலா!கோவர்த்தனா! கிருஷ்ணா!


....


அட நாராயணா!


என்ன கொடுமை ஸார் இது!


*****


ஆ!


வாத்ய கருவிகளை வைத்து Music Academy பெயரை அழகாக வடிவமைத்து அதை அரங்கினுள் பொருத்தி இருந்ததை,வெகு காலமாக ரசித்து வந்தேன்.

இப்போ அதை காணவில்லை!

Change is the only constant thing ஆ?

#musicacademynamelogo


*****

கச்சேரிColourful ஆ அமையனும்னா வர்ணத்தோட ஆரம்பிப்பது உத்தமம்.

*****

வெளியிலே அக்னி நட்சத்திரம்.

உள்ளே செம்ம குளிர்!

போர்வை யில்லாமலே

*ஸ்வர கோர்வை யை ரசிக்கிறேன்.

வாணி மஹால்.

மாயாமளவகெள=15

temp =15டிகிரி..

ஒரு மாமா shawl ஸகிதம் வந்திருக்கார்.உஷார் பார்ட்டி.

******

Just Felt So!

every morning my wife will ask me ,are you going to any kutcheri today?

I will reply ,Wait.Paper is yet to come.I will confirm, after seeing Today's Music Events in 'that' paper.

I wish that ALL the city sabhas come together and create a Common 'Website' to Upload their monthly programs (music/dance/drama) in their sabhas,so that rasigas ,at the click of the mouse can plan in advance to attend the programs.

We can search based on date,artist,sabha etc.,

It will come under ONE e-umbrella.

Dependance on physical paper can be done away with & sabhas can save the money spent on advertisements.

The reach will be much much larger.

Ads in that website can bring money also.

(There are some third party site available ,but effective only during the margazhi season.)

#chennaicitysabhasdailyevents#eadvertisement#commonwebsite

******

டமால்! டுமீல்! பட்! படார்!

அதுக்கு பெயரே மிருதங்கம்..மிருதுவான அங்கம் வாய்ப்பாட்டுக்கு.

தவில் மாதிரி வாசிக்கப்டாது.

பீரங்கி மாதிரி முழங்க கூடாது.

பெரீய்ய வித்வான்கள்ளாம் இப்படி படுத்தலாமா?

இதுக்கும் ஏகப்பட்ட கைத்தட்டல்.

பாடகரே,பலே! சபாஷ் !ன்னு கொம்பு சீவி விடறார்!

டமார செவுடு கூட சரியாகி விடும் போல.

only sound bytes.

No Sowkyam.

No Sugam.

Felt like an angry bird.

அப்றம் தனி அப்போ,

தனித் தனியா, யல்லாரும், கேண்டீனுக்கு போகறான்னு கம்ப்ளேண்ட் பன்னப்டாது.

ம்.ட்ட்டேளா?

என்னமோ போடா மாதவா.

Sogasugaa Mridanga Taalamu Jata Gurcchi Ninnu Sokkajeyu Dheerudevvado

Who is ("evvado") the valiant one ("dheerudu") enchanting you ("sokkajeya") by harmonising ("jata gurcchi") so pleasurably ("sogasuga") the drum ("mridanga") and the beat ("taala")?

Dear Rasigas,

ஸ்வாமி புறப்பாடுக்கு முன்பு,வேட்டுச் சத்தம் வருமே,அது போலவோ,

அல்லது எம்டன் பாம் போட்டா மாதிரியோ வாசித்தால்,silent ஆக கம்முனு குந்திக்குனு,உங்கள் அதிருப்தியை தெரிவிக்கவும்..in the interest of promoting high quality percussion support.

இதெல்லாம்highly subjective views ன்னு,என்னிய மடக்காதீங்கோ!

sound decibles எல்லாருக்கும் ஒன்னுதேன்!

unless one is அவ்வளவா கேட்காதா or அவ்வளவும் கேட்காதா type.

என்ன நாஞ்சொல்றது?

*****

அரக்கோணம் டேஸன் வந்தவுடனே,நிறைய ஸீட் காலியாகி,நிக்கறவாக்கு ஸீட் கிடைச்சு,நிம்மதியா உக்காந்துப்பாளே,


அந்த மாதிரி, தனி ஆவர்த்தனம் ஆரம்பிச்ச உடனே,பல ஸீட் காலி.


அதை பிடிக்கறதுக்கு தள்ளு முள்ளு.கர்ச்சீப்,அங்கவஸ்தரம் எறிதல் நடக்கிறது.


தனிஆவர்த்தனம்ங்கறது ரொம்ப ஒஸ்தியான ஸமாச்சாரம்.அனுபவிக்க தெரியல.ம்ம்ம்...


இது காலங்காலமா நடந்துண்டு வருது.


எப்போ மாறுமோ?


******


Rishabapriya(Ratipriya) 62 வது மேளம்..Vijay TV ல இன்று காலை Bharath Sundar presented the Koteeswaraiyer kriti கன நய..beautifully followed by a eloborate awesome swarakalpanas.இந்த அபூர்வ ராகத்தை கையாண்ட விதம் பிரமிக்கதக்கதாக இருந்தது.Hats off to this young vidwan..கர்நாடக சங்கீதம் #பரத்# போன்ற கலைஞர்களிடம் பத்திரமாக உள்ளது


*****


Wish the great composer ,Sri Koteeswaraiyer's Jayanthi festival is conducted by sabhas every year to pay tributes for his invaluable contributions to our carnatic music.


இதுவும் பெத்த கச்சேரி தான்!


என்னமோ போடா,மாதவா!


ஒரு வித தொய்வு வந்துவிட்டது!


ம்ம்.


பிடில் வித்வான் காப்பாத்தறார்.


select பன்ன ராகங்கள் அப்படி!

******

For 40 minutes...Ragam Kedaragowla.. Vidushi Raga Alapanai-Keerthanai-Kalpanaswaras..பாடினா..இந்த ராகம் Filler/Virutham க்கு தான் நன்னா இருக்கும்..Main Ragama பாடினா..அது கச்சேரிTempo/Pulse Rate ஐ வெகுவாக குறைத்து விட்டது..இது அடியேனுடைய கருத்து..மாற்று கருத்தும் இருக்கலாம் சிலருக்கு

******

In my row ஒரு வயசான மாமா திடீர்னு மிக அவசரமா இறங்கி ஒரு gate வழியா வெளியேறி, மிக குறுகிய அவகாசத்தில் அதே வேகத்திலே இன்னொரு gate வழியா அவசரமா உள்ளே நுழைந்து seat coordinates miss பண்ணி, எல்லாரோட காலையும் மிதிச்சிண்டு ஓரு வழியா seat la அமர்ந்தார்..எதுக்கு அவ்ளவ் அவசரமா போனார்?வந்தார்? எப்டி அவ்ளவ் சீக்ரமா பிரதகஷணம் பண்ண முடிந்தது? ஒரு வேளை IceBoy விளையாட்டா இருக்குமா? அவாத்து மாமி ஒரு முறை முறைச்சுதல "ஞே" ன்னு முழிச்சிட்டு சப்த நாடியும் ஒடுங்கி சமர்த்து boy ஆக மாறிட்டார்

******

ராகத்தில் லயித்த போது..எங்கிருந்தோ வந்தான்..ஒரு இரட்டை நாடி பையன் ..வேகமாக..


சட்டென்று சுதாரித்து என் காலை இழுத்துக்கொண்டேன்..நல்லவேளை..ரோகம் இல்லை!


மீண்டும் ராகத்தில் லயித்தேன்! sabha ல இதைல்லாம் சகஜமப்பா!

*****

you bite the Alphonse Mango, the king of fruit at any part..the taste will be heavenly..like that yesterday ,the whole kutcheri of Ranjani & Gayatri (Raga duo) is heavenly music.but still I lost myself in the Devagandhari kriti of Dikshidar with chittaswaram,even though its a short one..such a bliss!

*****

மிக அற்புதமான ஒரு இசை சாரலில் நனைய வாரீர்! குருவை மிஞ்சின சிஷ்யன்.

எடுத்துக்கொண்ட ராகங்கள் ஒவ்வொன்றும் மணியானவை. வயலினில் ஒரு வாய்ப்பட்டு என்றே சொல்லலாம்.விஞ்ஞான வளர்ச்சிக்கு ஒரு ஓ போடலாமே! என்ன தவம் செய்தோம் நாம் எல்லாம் இந்த

கால கட்டத்தில் வாழுவதற்க்கு. Another Stress Buster

அயங்கார் பையன் கன்யா குமரியின் நிழல் தான். ஆனாலும் இங்கே நிழல் நிஜமாகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. கண்ணன் குமரி ..சங்கர ஆபரநத்திற்கு ஒரு ஒஸ்தியான ஆபரணம்.

கே வீ பிரசாத் மிர்தங்கம் ஒரு வரப்பிரசாதம். கடம் தடம் புரளவில்லை

*****

நோபல் பரிசு' விஞ்ஞான விற்பன்னர்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.பல வயதான சங்கீத ஜாம்பவான்கள் ,இன்னும் 'சங்கீத கலாநிதி' பட்டம் வாங்காமலேயே இருக்கிறார்கள்.நோபல் பரிசு மாதிரி ஒரே வருடத்தில் (அவர்களுடைய ஜீவித காலத்திலேயே)இரண்டு வித்வான்களுக்கு சங்கீத கலாநிதி பட்டம் வழங்கலாமே. மாற்றம்வந்தால்,

ஏமாற்றமும்,விரக்தியும் தவிர்க்கப்படும்.

******

Ragam Gopriya இந்த ராகத்தில ஸ்வரபேதம் பண்ணினா கூட அதே Gopriya ராகத்திலதான் வந்து முடியுமாம்.இந்த விஷயத்தை விதூஷி செளம்யா இன்னிக்கி மார்கழி மஹாஉத்ஸவத்தில் Vijay Tv ல சொன்னார்.

*****

சங்கீத வித்வத் சபையின் கவனத்திற்கு...Shertallai Dr Ranganatha Sharma வின் சங்கீத வித்வத் அபாரம்.இன்றய கச்சேரியே அதற்கு சாட்சி.

"சங்கீத கலாநிதி" விருதுக்கு மிகவும் தகுதியானவர்.இனியும் காலம் தாழ்த்தப்டாது.

(இசை மேதை தஞ்சாவூர் S Kalyanaraman னுக்கு இந்த விருது வழங்கப்படவே இல்லை.He was a Musician's Musician.)

*****

குளிரில் சங்கீதத்தை எப்படி கேட்க முடியும்? "கனடா" like temperature ல "கானடா' ராகத்தில லயிக்க இயலுமா @MA? AC ஐ மிதமாக வெச்சா தேவலையா இருக்கும்..செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

*****

Even during Music Season,Senior Artists are not feeling guilty of Singing Micro RTP!...Hope RTP will not go to RIP

*****

I have attended 100 plus concerts in this Margazhi Music Season.

So it would be difficult for any normal person to rate the bestest concert.

But I did not have any difficulty at all to select the Two Bestest Concerts

&

Two Bestest Artist from my list.

First Bestest Concert on 25th Dec2019

at iconic Satyam Cinema.

Sarasawathi Veena Concert by Vidushi Jayanthi Kumaresh.

Second Bestest Concert on 30th Dec2019

At Madras Music Academy.

Again Sarasawathi Veena Concert by Vidushi Jayanthi Kumaresh

****

Flute Jayanth

is a
Flute Giant!

****

கொஞ்சும் கெஞ்சும்

திலங் தில்லானா

இசையே மருந்தாகும்

ரஸவாதம்!

லால்குடி என்றாலே

மகுடி இசைதானே!

வசப்படும் மனம்

தெளிந்த ஓடை

போன்ற குரல்

எட்டே நிமிடத்தில்

எட்டா உயரத்துக்கு

அழைத்து செல்லும்

பட்டு போன்ற குரல்

கிருதி பட்டுக்கு

வாழ்த்துக்கள்

******



Comments

Popular posts from this blog

Quality of Music!

கச்சேரி அமைத்துக் கொள்வதெல்லாம்!!