ஸங்கீதகிறுக்கல்ஸ்-4 th பாகம்


 ஸங்கீதகிறுக்கல்ஸ்-4 th பாகம்

அட ராமா!


ராமப்பிரியா(52) ராகம் காணாமல் போகற்துக்கு மின்னாடி,


யாராவது பாடுங்கப்பா!


இப்படிக்கு


ராமப்பிரியன்.


*******


ரண்டு பேர் சேர்ந்து பாடறச்சே


தக்ளூன்டு latency வரத்தான் செய்யும்.


பக்ஷே ,அன்னிக்கி very late ncy!


1 ம் நம்பர் த்வைதமு சுகமா முடிச்சு


அத்வைதமு சுகமா ஆரம்பிச்சுடுத்து.


2 ம் நம்பர் மெதுவா த்வைதமு சுகமாவை ஆரம்பிக்றது.


சுகம் இல்லே


சோகம் தான்.


இந்த latency


கச்சேரி முழுவதும் வ்யாபித்திருந்தது.


*******


அந்த காலத்தில RTP என்பது ஒரு serious matter. நேத்து கச்சேரிக்கு போனயே,RTP (ராகம் தானம் பல்லவி) என்ன பாடினா? என்பது தான் முதல் கேள்வியாக இருக்கும்.'ஆனந்தம் தா ' என்பதுதான் இப்போ மருவி தானம் பாடும் போது, ' தொம் தொம் ' ஆகி விட்டது.சுமார் 90 நிமிடமாவது RTP க்கு ஒதுக்கப்படும்.(அங்கவஸ்தரித்தில் கையை மறைத்துக் கொண்டு தாளத்தை போட்டு.. பிடில், மிருதங்க வித்வான்களை அழ வைத்த காலங்களும் உண்டு.) விஸ்தாரமான ராக ஆலாபனை, நான்கு கால நிரவல் மற்றும் கணக்கு வழக்கான ஸ்வரபிரஸ்தாரங்கள்,வசீகரமான ராகமாலிகாவுடன் பக்க ,உப பக்க ,உப உப பக்க (மோர்சிங் மற்றும் கொன்னக்கோல் சகிதம்) தனி ஆவர்தனத்துடன் RTP நிறைவு செய்யப்படும்.பக்க வாத்யக்காரார்களுக்கு முன்கூட்டியே தாள விவரங்கள் சொல்லப்படும்.குட்டி ரிகர்ஸலும் உண்டு, கச்சேரி ஆரம்பிக்கும் முன்.


ஆலத்தூர் பிரதர்ஸ்,செங்கல்பட்டு ரங்கநாதன்,கல்யாணராமன், மணக்கால் ரங்கராஜன், இரண்டு சுகுணா மாமிகளும்,MLV, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன்,MSG இவா கச்சேரிக்கெல்லாம் RTP கேக்கற்துக்கென்றே,கூட்டம் அம்மும்.ஆனா இப்ப RTP is Take it easy policy..இந்த item பின்னுக்கு தள்ளப்படுகிறது.சுருக்கமாக சொன்னால் RTP 'Honey I Shrunk You' range க்கு குட்டி யாகிவிட்டது வருத்தப்பட வேண்டிய விஷயம்.ஒரு கலைஞரின் முழு விஷய ஞானத்தையும், execution skill set யையும் நிர்ணயப்பதற்கு ஒரு அளவு கோலாக RTP இருந்தது அந்நாளில்.ஏன்னா சாதாரண ராகம் மற்றும் ஸ்வரம் எல்லாரும்தான் பாடறா. so differentiator is RTP தான்.Instrumentalist பல்லவி யை பாடி ஒரு ஆவர்த்தம் பாடிக் காண்பிப்பார்கள்.இப்போ அது பண்றதில்ல.


K Gayatri சிம்மநந்தன தாளத்தை வெகு சலபமாக கையாண்டவிதம் போன வருடமும், மற்றும் இந்த வருடம் ஸர்பநந்தன தாளத்தையும் present செய்த அழகை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.கேட்டு ரசித்தால் தான் முடியும்.இந்த சின்ன வயதில் இவ்வளவு திறமை ,என்னைப் போன்ற சங்கீத பிரேமிகளுக்கு கொண்டாட்டம்தான் போங்கள்.அது என்ன சீஸனில் மட்டும்தான் RTP பாடுவதென்று சண்டித்தனம் பன்ற வில்லத்தனம்.ஆகவே நிறைய RTP பாடுங்களேன் என்பது அடியேனுடைய விண்ணப்பம்.


*******


Artist ராகஆலாபனையை ஆரம்பித்த உடனே,ராகத்தை கண்டுபிடிக்கும் algoritham based software நம்ம பயலுகள் கண்டுபிடித்தால் திவ்யமாக இருக்கும். வாகதீஸ்வரியோ,நாஸிகாபூஷிணியோ ,சுமனேசரஞ்சனியையோ பாடகர் ஆரம்பித்தவுடன் ஜனங்க ரொம்ப கவலை படர்துகள். IT விற்பன்னர்களே..போட்டி ஆரம்பமாகட்டும்.free android download ஆ பன்னிடுங்கோ..கோடி புண்ணியமும் நாரத மகரிஷியின் ஆசிர்வாதமும்.கிடைக்கும்.


*******


For the past 45 days ,I have been attending carnatic music concerts..and now because of winter season,I got sour throat..Hats off to our Vidwans & Vidushis who are doing back to back concerts ,but still maintains their voice box intact.I have heard that Vidwan Ariyakudi Ramanujaiyengar was not at all affected by the winter season.He will even take butter milk before the concert! Curent generation is prudent in preserving their voice.


*******


Sabhas should install Mobile Jammers..
parallel music ..from ringtones..காக்க காக்க, இளையராஜா hits,குறை ஒன்றும் இல்லை,bollywood hits, நாக்க முக்க..ஒலிபரப்பு... BGM..while khamboji is being played .
ஒரு யவதியின் செல் சிணிங்கியது..ஏகப்பட்ட compartments in her backbag..எதில்ல வெச்சி தொலைச்சான்னு தெரியல..கடோசியா 'கைபேசி' யை எடுத்து பேசின போது, வித்வான் "கைகவசி" ராக ஆலாபணையில் இறங்கினார்.


********


AC யும் சற்று தூக்கலாக இருந்து,சங்கீதமும் படு ஸூமாராக இருக்கச்சே, நித்ராதேவி நம்மை வாஞ்சையுடன் ஆட்கொள்கிற moment இருக்கே..'...ஏறக்குறைய சொர்க்கம்' தான் போங்கோ!


*******


RaGa kutcheri..கூட்டம் அம்முது.. extra chairs போட்டப்றம் கூட பத்தல.
5 நிமிட் லேட்டா வந்து ,ஓரு அம்பி வந்து பக்கத்ல உக்காந்தான்.
அரை மணி நேரம் கழித்து.
அவனோட phone ரிங்கித்து.
மாமா எனக்கு டோணர் பாஸ் கிடைச்சுது..நான் ground floorla 8 வது row.. நீங்க அந்த டிக்கெட்டை வேற யாருக்காவது கொடுத்துடுங்கோ!...
டேய்!
இதுல்லாம் three much da! அனாவஷியமா ஒரு டிக்கெட் வேஷ்ட் ஆயிந்தி!
இது தகுமோ?
இது முறையோ?
இது தர்மம்தானோ?


*********


கச்சேரி ஆரம்பித்து 15 நிமிடம் கழித்து வருபவர்களூக்கு 10 பைசா அபராதம் கட்டினால்தான் அனுமதிக்கனும்..அப்ப பழைய 10 பைசா நாணயம் 100 ருபாய்க்கு black ல் விற்கப்படுவதிற்கு,சாத்தியக்கூறுகள் நிறைய.


*******


What he has accomplished in just 33 years..பிரமிப்பா இருக்கு..Swati Thirunal Maharaja.


*******


பார்த்து கடன்கொடுங்கள்..


மனிதரை பார்த்து கடன் கொடுங்கள்.


பார்த்து கடன் கொடுக்கா விடில் பணம் போகும்!


a rare kriti of gopalakrishna bharathi ..


now Bharthsunder singing in vijay super tv..margazhi maha utsavam..


Are PSU bank chairmans listening..


double digit NPAs!


*******


ஆர்ட்டிஸ்ட்டின் அன்பான கவனத்திற்கு!
Sober Ragams லாம் எடுத்து,
main/sub main items சா,பாடி,
Sobers ஆனா,
duck out தான்!
துக்கடா ragams ஐ ,மெயின் itemஆ,
convert பன்னா,
பக்கோடாதான்!
எல்லாரும் MDR ஆ, ஆக முடியாது.


******


கொஸ்ஸின்: பம்பாய் ஜெயஸ்ரீ சங்கீதத்தை ரண்டே வார்த்தையில் விவரி. (Mark:100)


விடை: கர்ப்பகிரகம் ரகம்!


Mark awarded.


********


Prince of Music in King of Sabha Wat a performance! Sandeep Narayanan


********



You bite the Alphonse Mango, the king of fruit at any part..the taste will be heavenly..like that yesterday ,the whole kutcheri of Ranjani & Gayatri (Raga duo) is heavenly music.but still I lost myself in the Devagandhari kriti of Dikshidar with chittaswaram,even though its a short one..such a bliss!


********


அங்க யாராவது வராளா? is the most asked question in Sabhas for seats..hearing for 1000 th time!

*********

கடுப்பேத்தறார் moment..when the entire row is empty..somebody asking you to remove your bag.....& sitting next to you.

********

Wish all the exits are locked..during Tani Avardanam..to prevent exodus!

********

Every time Akkarai Subbulakshmi surprises me..with an outstanding performance..she is a great violinist..for sure. what a vidwath!

********

சபை நிறைந்த பெரீய்யய கச்சேரி.

தனி மட்டும் அச்சா ஹை!
சுபம்.

*********

இந்த மாபெரும் வித்வத் சபையில் பெரும்பாலும், இளம் கலைஞர்களே கொடிகட்டி பறக்கிறார்கள்.

மிக்க மகில்ச்சி!
Carnatic Music is in the safe hands!

*********

தேர்தல்ல deposit இழந்த எம் எல் A or எம் P மாதிரியான முகபாவத்துடன் or like a wounded tiger ,சில பேர் அலைந்துக் கொண்டிருக்கிறார்கள்.

5 nimits rest room போய் ,return journey ல வந்தவுடன், மொதல்ல உக்காந்த அந்த seat housefull.
என்ன பன்றது.
அடுத்த election announce பன்ற வரைக்கும் waiting தான் பன்ன முடியும்.
மத்யான கச்சேரில ஆணி அடிச்சா மாதிரி குந்திக்கனும்.
இல்லாக்காட்டி ஸீட் அம்பேல்தான்.
Be careful.

*******

சரளி வரிசை மாதிரி

ஒரே வராளிமயம் ba.

**********

Sabha canteen ல..

சின்னதா கும்மோணத்திலேர்ந்து import பண்ணின துளிர் வெத்தலையை, தாம்பூல தட்ல வைக்கப்படாதோ?
வாழை இலை size க்கு வச்சா, வத்தலையை போட முடியாது.
மேயத்தான் முடியும்!
சரி..சின்ன வத்தலைலாம் கீழே இருக்கும் போலன்னு, யல்லா கவுளியையும் திருப்பு திருப்புன்னு திருப்பி போட்டு அகழ் ஆராய்ச்சியும் பண்ணேன்.
ம்ஹூம்.
கீழே இருக்கற்தல்லாம் கல்யாண சாப்பாடு தலைவாழை இலை size.
ஓடியே வந்துட்டேன்.


ஆச்சா..


1.30 மணி கச்சேரிக்கு உள்ளே main entrance வழியா நுழைந்தேன்.
மின்னாடி நடந்து போற மாமா auto மாதிரி ,ஓவர்take பன்றதுக்கு side உடல.
Retired surveyor போல இருக்கு..எது beshtu seat ன்னு left n right seeing & moving.
நான் அவர் பின்னாடி கோன ஒய்யாளி மாதிரி going.
கடோசில அவர் அந்த கேண்டீன் பக்கம் இருக்கிற gate வழியா escape!
அட நாராயணா!

********

இரண்டு பணக்கார சகோதிரிகள், கச்சேரி ஆரம்பித்து ஒரு மணிநேரம் கழித்துதான் வருவார்கள்.வாசலிருந்தே தெரிந்தவர்களை கண்டுபிடுத்து" ஹாய! ஹாய் !சொல்லிக்கொண்டே கடைசி வரிசையில் போய் உட்காருவாருகள்.முன்னாடி இடம் இரு ந்தாலும்.attention seekers , insensitive to the art of music.
சில பேர்கள் இரண்டு குழந்தைகளை அழைத்து வந்து இரண்டு பேர் கிட்டயும் game console & ear phone குடுத்துவிடுவார்கள்.அதுகள் பண்ற ரகளை இருக்கே,ரண களம்தான்.
இன்னும் சில பிருகிரிதிகள் false voiceல கூடவே பாடித்தொலைப்பார்கள்.ஒரு சில முறை நெற்றிக்கண்ணை திறந்தேன்.பயணில்லை. வெளிநாட்டவர் சங்கீதத்தை ரசிக்கும் விதமே தனி.மேடையில் ஒரு foreigner daily dias ticket வாங்கி அமருவார்.கச்சேரி ஆரம்பித்தவுடன் ஒரு மோன நிலைக்கு போய்விடுவார்.தனி ஆவர்த்தனத்தை ரொம்பவே ரசிப்பார்.தனக்குதானே சிரித்து கொள்வார்.10 வருஷத்துக்கும் மேலாக பல ரசிகர்கள் முகம் பரிச்சியமாக உள்ளது.

*******

ஓரு வெளிநாட்டு தம்பதிகள் 10 வருடத்திற்கும் மேலாக ஓவ்வொரு வருடமும் ஆஜர்.

எல்லா வருடமும் அமெரிக்காவிலிருந்து தவறாமல் வருகின்ற ஒரு சீக்கிய ரஸிகர் absent.
Finland நாட்டை சேர்ந்த ஓரு Professor of Music போன வருடம் நன்பரானார்.1990 வருடத்திலிருந்து இசை விழாவிற்கு வருகிறார். highly talented composer of western classical music..done carnatic fusion music with our leading artists.down to earth person.நான் கூப்பிட்ட உடனேயே என் இல்லத்திற்கு வந்து சங்கீத சம்பாஷனை நடத்தி lunch சாப்பிட்டு விட்டு போனார்..absolutely no பந்தா!
இந்த வருடமும் நட்பு தொடர்கிறது.

*******

சரசரக்கின்ற காஞ்சிப் பட்டும் 8 கல் பேசரியும் மெல்ல மெல்ல குறைந்து கொண்டு வருகின்றன.
வேஷ்டியும் ஜிப்பாவும் கூட.
ஷார்ட்ஸும்,ஜீன்ஸும்,டீ ஷர்ட்டும்தான் order of the day.
அமெரிக்க இந்தியர்களூடைய வழ வழ இங்கீலீஷூம்,அதற்கு ஈடாக நம்மவர்கள் செயற்கையாக பேச பிரயத்தனப்படுவதும் பரிதாபத்துக்குரியது.
stalwarts like ariyakudi,madurai mani,gnb,mlv,skr,dkp,MS,Semmungudi,lalgudi,msg எல்லோரும் மறைந்த பிறகு,கர்நாடக சங்கீதம் ஒரு கேள்விக்குறி ஆகி விடுமோ என்ற அச்சம் இருந்தது.
இப்போது அந்த பயம் அறவே இல்லை.இளைய தலைமுறைகள் நன்றாகவே இந்த பாரம்பரிய இசையைக் கட்டிக்காக்கிறார்கள்!

*******

அநேகமா RTP பல்லவி வரிகள்

முருகர் உம்மாச்சி மேல்தான்.
அதுக்கு எதாவது காரணம் உண்டா?

********

மதுவந்தி தர்மவதியை பாராட்டுகிறது.

சென்ணை வாழ் வட இந்தியர்களுக்கு south indian music ஐ விட,

south indian சாப்பாடு மிகவும்பிடிக்கும் போல.
வேன் நிறைய வட இந்தியர்கள் may be from sowcarpet.
full meals section house full.

********

இப்போ ஒரு புது சினிமாக்கு advertisement buildup ஐ பார்த்துட்டு,

high class ticket வாங்கி போறீங்கன்னு வச்சிக்கவும்.
பெரீரீய்ய நடிகர்கள் ,biggu பட்ஜெட் இத்யாதி.
ஆனாக்க , கொஞ்ச நாழிக்கப்றம் படம் செம்ம சொதப்பல்ன்னு தெரிய வருகுது.
அப்போ உடனே வீட்டுக்கு போகலாம்னு சட்டுன்னு , abrupt ஆ, முடிவலாம் எடுக்க ப்டாது.
வாட் யு should do know,
start focussing on camera 'angles'.
இந்த ஷாட்டை எப்படி எடுத்தார் camera artist ன்னு வியந்து பாருங்கோ.
mujic டைரடக்கர் பிரமாதமாக BGM & Songs போட்டிருப்பார்.
அது மேல கவனம் செலத்தி மகிழ்ச்சியா காலத்தை தள்ளலாம்.
அந்த காலத்தில பாட்டுக்கு மாத்திரம் ,பல முறை படத்தைப் பார்ப்பார்கள்.
big budget ல ,foreign location song sequence நன்னா இருக்கலாம்.

சரி..இன்னாத்துக்கு இப்ப நீயி இவ்ளோவ் build up குடுக்கற? ன்னு கேட்கறேளா?

வரேன் பாயின்டுக்கு.

அதே மாதிரி பெரீய்ய artist

பேரும் புகழும் பெற்றவரோட கச்சேரி.
டிக்கட் வாங்கி கச்சேரிக்கு போனீங்க.
அன்னிக்கி கச்சேரி எடுபடல.
பிரச்சணை என்னன்னு அவருக்கே தெரியல.
ரொம்ப சுமார் ரகம்.
battery down ஆன old Ambassador car மாதிரி self எடுக்கலான்னா, நீங்க
உடனே கோச்சிண்டு கிளம்ப ப்டாது.

camera வை வயலினிஸ்ட் மேல focus பன்னுங்கோ.

அவர் பிரமாதமா பாடகர் பாடுவதை, blotting paper மாதிரி உள்வாங்கி,
அதை மேலும் பாலீஷ் பன்னி, சங்கதிக்கு சங்கதி தூள் கிளப்புவார்.அதை மெச்சி மகிழலாம்.

Or

மிருதங்க வித்வான் தங்கமாக வாசித்து, உங்களை தங்க வைப்பதற்கு சாத்யகூறுகள் நிறைய உண்டு.

கிளம்பிட்டா ?
அந்த வைபவத்தை காணும் கேட்டு மகிழ்கிற பாக்கியம் கிடைக்கா.
நிரவல் நன்னா அமையும்னா மிருதங்க வித்வானுடைய பங்கு மிகப் பெரியது.
அந்த interlude யையும் அனுபவிக்கலாம்.

சில சமயம் RTP நன்னா அமையும்.

பஹூத் அச்சா தனி ஆவர்த்தனமிற்கு பிறகு,
கடோசில ,துக்கடா section பிரமாதமாக அமையும்.
இந்த மாதிரி பல சமாச்சாரம் இருக்கு அனுபவிக்கற்துக்கு.
யோசிச்சி முடிவு எடுங்கோ please. அந்த காலத்தில Broadway & Prabath cinema theater ல, சினிமாவுக்கு போனா, main gate பூட்டப்படும்.நடுவில வெளியே வர முடியாது.

**********

மேடையில் பாடும் Artist க்கு கீழே நிறைய விசிறிகள்.

ஆனால் Artists க்கும்,விசிறிகளுக்கும்
ஒன்று ( அ) ரண்டோ ,
பணைஒலை (அ) நாகீரகமான ஜப்பான் விசிறி வழங்கினால் ,ஜம்முன்னு விசிறிண்டே கச்சேரியை அனுபவிக்கலாம் என்று கூறிக் கொள்ள ஆசைப் படுகிறேன்.
செம்ம ஹாட்டு அரங்கம்.
தீபக் ராகம் பாடாமல் இருக்கனும்.

********

Embar Kannan காபில கலக்கறார்.

அந்த கொஞ்சலான, கெஞ்சலான ஆலாபணை நடுவில் ஒரு கீற்றுப் போல் வந்த folk மற்றும் western tune போன்ற சங்கதிகள்,
இவர் வில்லில் இருந்த வந்த வானவில்லேதான்.
இது சத்யம்.
சத்யம அரங்கினில் இந்த செளக்யம்.
************

இது ஸங்கீத கச்சேரியா?

இல்லே!
ஸங்கீத தவம் தான் பன்றார்.
சத்யம் அரங்கினில்.
இது சத்யம்.
இந்த மாதிரி தவத்தினில் பங்கேற்பது பெரும் பாக்யம் .

Dr Ranganathsharma Concert

Comments

Popular posts from this blog

Quality of Music!