ஸங்கீதகிறுக்கல்ஸ்-5 th பாகம்
ஸங்கீதகிறுக்கல்ஸ்-5 th பாகம் இசை அபிஷேகம் என்று சொன்னால் அது மிகையாகாது. Music Academy யில் நேற்று ஸ்ரீ அபிஷேக் ரகுராமின் கச்சேரி ஹவுஸ்ஃபூல். "நெர நம்மிதிநய்ய" பூச்சி ஸ்ரீநிவாச அய்யங்கார் இயற்றிய கானடா ராக வர்ணத்துடன் மாலை வேளை கச்சேரி கதணகுதூகலமாக களைக்கட்டியது. "களல நேர்ர்சினா" தியாகராஜரின் தீபகம் ராக க்ருதியை பாடிவிட்டு, தேவமனோஹரிக்கு தாவினார். தேவ காணம்தான்.இந்த மிக ரம்யமான ராகத்தை (கரக்கரபப்ரியாவின் ஜந்யம்) Vintage வித்வான்களிடம் பல வருடம் முன்னால் கேட்டததுதான்.இளம் வித்வான்கள் மறந்தே விட்ட இந்த ராகத்தை அபிஷேக் மிக நேர்த்தியாக கையாண்டவிதம் பிரமிக்க வைத்தது.அடுத்து அவர் 'கல்யாணி'யை ,அழைத்தோடி வந்தார் தர்பாருக்கு. 20 நிமிட கலகலப்பான கல்யாணி ஆலாபனை. இதுவரை கேட்டிராத விசேஷ பிரோயோகங்கள். நடு நடுவில் ஸ்வர பேதம் வேறு. மற்றும் நகாசு வேலைப்பாடுகள், அவுட்வாண சங்கதிகள்.ரசிக சிகாமணிகளை பரவச நிலைக்கு அழைத்துச் சென்று உச்சத்தைக் காட்டினார்.வயலின் மைசூர் நாகராஜின் எதிர் சம்பாவனை அபாரமாக இருந்தது.நிரவல் முடிந்த பிறகு"தனி ஆவர்த்தனம்" என்பது ஒரு புதிய முயற்ச...